This Article is From Jun 15, 2020

தென் மேற்குப் பருவமழை: இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

தென் மேற்குப் பருவமழை: இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது
  • மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது
  • தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது. 

வானிலை மையத்தின் தகவல்படி, “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குப் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கோவை, நீலகிரி, தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தென் மேற்குப் பருவக் காற்று காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்,

நாளை வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.