This Article is From Sep 09, 2018

"ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன" - அமைச்சர் வேலுமணி

ஓரிரண்டு நாட்களில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்

Advertisement
தெற்கு Posted by

கோவை: தமிழக அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சாதகமாக பல கோடி ரூபாய் டெண்டர்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை தனியார் ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் வேலுமணி, “ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை என் மீது வைத்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை. அனைத்து டெண்டர்களும் விதிமுறைகள் பின்பற்றி தான் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “ஓரிரண்டு நாட்களில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். அதிமுக ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement