This Article is From Jun 24, 2020

தஞ்சை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

தஞ்சை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூரில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

ஹைலைட்ஸ்

  • சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் என கணிப்பு
  • சென்னையிலும் ஆங்காங்கே மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • தமிழக மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது

தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் தென் மேற்குப் பருவமழை ஆரம்பித்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம், ‘தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், 

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூரில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

.