உள்ளாட்சிக்கான தேவைகள், அடிப்படை தேவைகள் நிறைவேற்றம் உள்ளிட்டவைகளுக்காக நிலுவையில் இருக்கும் தொகை விரைந்து வழங்க வேண்டும் என்று 14-வது நிதி கமிஷனை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ 2017-18-ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 194.78 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அத்துடன் 2018-19-ம் ஆண்டுக்கான நகர்ப்புற நிர்வாக அடிப்படை செலவு நிதி ரூ. 876.94-யை வழங்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர முடியும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான அடிப்படை செலவுத் தொகை ரூ. 758.06-யையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புற மக்களின் தேவைகள் நிறைவேறும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)