Read in English
This Article is From Oct 04, 2019

தமிழ்நாடு காவல்துறை கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன

தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்களை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement
Jobs Edited by

இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவேற்றிய சான்றிதழ்களின் அசலினை கொண்டு வரத் தவறினால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்

New Delhi:

கான்ஸ்டபிள், ஃபயர்மேன் மற்றும் சிறை வார்டன் பணிக்கான நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்களை தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. 

வாரியம் எழுத்துத் தேர்வின் முடிவு மற்றும் கட் -ஆப் மதிப்பெண்களை செப்டம்பர் 27 அன்று துண்டித்து விட்டது. இப்போது தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்களை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வாரியத்தின் இணையத்தில் தேர்வு எழுதியவர்களின் சுயவிவரத்தில் உள் நுழைந்து தங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கலாம். 

ஆட்சேர்ப்பு தேர்வில் தகுதி பெற்றவர்கள் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை ஆகியவற்றிற்கு வர வேண்டும். 

“சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் தேர்வாளர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பிக்கும்போது பதிவேற்றிய சான்றிதழின் அசலை கொண்டு வர வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவேற்றிய சான்றிதழ்களின் அசலினை  கொண்டு வரத் தவறினால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.” என்று வாரியம் தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement