Read in English
This Article is From Mar 26, 2019

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய வழக்கு: 28ஆம் தேதி விசாரணை!

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக வலியுறுத்தி வருகிறது.

Advertisement
இந்தியா

இடைத்தேர்தல் நடத்தக்கோரிய வழக்கை 28ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

New Delhi:

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுடன் சேர்த்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 2 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் தேர்தலை நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து இருந்தார்.

Advertisement

இதனிடையே, அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக இருந்த ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒட்டப்பிடாரம் வழக்கையும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார்.

மேலும், சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் திடீரென உயிரிழந்தர். அதனால், சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

Advertisement

இதையடுத்து ஏப்ரல் 1-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், முன்னதாக வரும் 28ம் தேதியே வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

Advertisement