Read in English
This Article is From Oct 03, 2018

சேலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்; சாதூர்யத்தால் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள அணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பலர் உள்ளாசமாக குளித்துக் கொண்டிருந்தனர்

Advertisement
தெற்கு

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது, சுமார் 200 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்

Salem (TN):

சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள அணைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பலர் உள்ளாசமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால், சாதூர்யமான யோசனையால் இந்த வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டனர் சுற்றுலா பயணிகள். 

சுமார் 200 பேர் நேற்று அணைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதைப் பார்த்த சிலர், பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தனர். அதே நேரத்தில் சிலரின் வழிகாட்டுதல்படி, மனிதச் சங்கிலியில் அனைவரும் கை கோத்து நின்றனர். இதனால், வெள்ளப் பெருக்கை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டனர். இந்த சம்பவத்தில் சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

வெள்ளப் பெருக்குக் குறையும் வரை ஆற்றிலிருந்த மக்கள் அனைவரும், மனிதச் சங்கிலியில் இருந்தனர்.

Advertisement
Advertisement