Read in English
This Article is From Oct 03, 2018

அம்பத்தூரில் தடம் புறண்ட ரயில்: ஒருவர் பலி!

சென்னை, அம்பத்தூரில் நேற்று ரயில் ஒன்று தடம் புறண்டது. இதில், ரயிலுக்கு அடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Advertisement
நகரங்கள்

விபத்து குறித்து விசாரித்து வருகிறது தெற்கு ரயில்வே

Chennai:

சென்னை, அம்பத்தூரில் நேற்று ரயில் ஒன்று தடம் புறண்டது. இதில், ரயிலுக்கு அடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இது சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், ‘சரக்கு ரயில், கட்டுப்பாட்டை இழந்து, பின் நோக்கிச் சென்றுள்ளது. இதனால், ரயில் தடம் புறண்டது. அப்போது, அருகிலிருந்த கன்டெய்னருக்கு பக்கத்தில் ஒருவர் இருந்துள்ளார். அவர் மீது ரயில் பெட்டி விழுந்துள்ளது. இதனால், அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து உயர்மட்டக் குழு ஒன்று விசாரணை நடத்தி வருகிறது’ என்று தகவல் தெரிவித்தார். 

இதைப் போன்று ஒரு சம்பவம், சென்னை எழும்பூரில் நடந்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு காலி பெட்டி, பணிமனைக்குச் செல்லும் போது, தடம் புறண்டுள்ளது. 

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி, ‘ரயில் பெட்டியிலிருந்த 8 சக்கரங்களில், ஒன்று தடம் புறண்டது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், இந்த சம்பவத்தால் ரயில்களின் பயண நேரம் தாமதமானது. ஆனால், சீக்கிரமே அதுவும் சரி செய்யப்பட்டு விட்டது’ என்று தெரிவித்தார். 

Advertisement
Advertisement