ஆசியா அல்லாமல், ஐரோப்பாவிலிருந்து வந்த பயணிகளே நியூயாரக்கில் கொரோனோ வைரஸை பரப்பியிருக்க வேண்டும் என என்னப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதியாக நியூயார்க் இருந்து வருகிறது.
முன்னதாகவே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், வைரஸின் பரவலை கண்டறிந்திருக்கலாம் என NYT மேற்கோள் காட்டிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூயார்க்கில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச்-1ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அப்படியானால், பிப்ரவரி மாத நடுப்பகுதியிலே வைரஸ் அந்த மாகாணத்தில் பரவத் தொடங்கியுள்ளது.
ஆசியாவிலிருந்த வந்தவர்கள் அல்லாமல், ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களே இந்த வைரஸை பரப்பியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NYU கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஒரு தனி குழு இதேபோன்ற முடிவுகளுக்கு வந்தது, வேறுபட்ட குழு ஆராய்ச்சிகளை படித்த போதிலும், இரு அணிகளும் மார்ச் நடுப்பகுதியில் தொடங்கி நியூயார்க்கில் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து மரபணுக்களை பகுப்பாய்வு செய்தன.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜனவரி 31 ஆம் தேதிக்கு முந்தைய இரண்டு வாரங்களில் சீனாவில் இருந்து வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்திருந்தாலும், மார்ச் 11 அன்று தான் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிப்பதாக அவர் கூறினார்.
அதனால், நியூயார்க் பகுதியை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வைரஸுடன் வந்துள்ளனர்" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)