Read in English
This Article is From Jul 29, 2018

டிடிவி தினகரனின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் காயம்

டிடிவி தினகரனின் கார் மீது அடையாளம் தெரியாத மர்ப நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்

Advertisement
தெற்கு
Chennai:

சென்னை: சென்னை அடையாரில், டிடிவி தினகரனின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை, ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் கார் மீது அடையாளம் தெரியாத மர்ப நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இச்சம்பவத்தின் போது டிடிவி தினகரன் காரில் இல்லாததால், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டு வீசிய போது, ஓட்டுநர் காரை வேகமாக இயக்கி சென்றுள்ளார். காரின் சில பகுதி சேதமடைந்துள்ளதால், காரில் இருந்த ஓட்டுநர், டிடிவியின் புகைப்படக்காரர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அசம்பாவிதத்திற்கு டிடிவி தினகரன் கட்சியில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர் புல்லட் பரிமளம் காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

கடந்த ஆண்டு, அதிமுக கட்சியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், ஆர்.கே நகர் தொகுதியில் தனிக்கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement