Read in English
This Article is From May 07, 2019

பிரபல பாலிவுட் டிவி நடிகர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது

கரண் ஓபராய் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்துள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே வீடியோவை கொடுப்பதாக மிரட்டியுள்ளார்

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

பெண்ணை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்துள்ளார்.

Mumbai:

தொலைக்காட்சி தொடர் நடிகர் கரண் ஓபராய் ஒரு பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு மே 9 வரை போலீஸ் காவலில்
இருப்பார் என்று ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம்
செய்ததாகக் காவல்துறை கூறியுள்ளனர்.

கரண் ஓபராய் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்துள்ளார்.
பணம் கொடுத்தால் மட்டுமே வீடியோவை கொடுப்பதாக மிரட்டியுள்ளார் என்று
ஓஷியார் பகுதி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையினை பதிவு
செய்துள்ளனர்.

பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரண் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்திய குற்றவியல் பிரிவு 376 பலாத்காரம் மற்றும் 384 (பணம் பறிப்பு)  ஆகிய
பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் சைலேஷ்
பசல்வாட் தெரிவித்துள்ளார்.

Advertisement

குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தன்னுடைய தொலைக்காட்சி பயணத்தை  மகேஷ்
பட் இயக்கிய ‘ஸ்வாமிமான்' என்ற தொடரிலிருந்து தொடங்கினார். ஃபேஷன்
மாடலாகவும், சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தவர். 

(With Inputs from ANI, PTI)

Advertisement
Advertisement