Read in English
This Article is From Sep 20, 2018

உ.பி-யில் 2 பேரை என்கவுன்ட்டரில் கொன்ற போலீஸ்… வீடியோ எடுத்த பத்திரிகையாளர்!

வீடியோவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நோக்கி காவலர்கள் துப்பாக்கியால் குறி வைத்து சுடுவது தெரிகிறது

Advertisement
இந்தியா
Aligarh:

உத்தர பிரதேசத்தின்(Uttar Pradesh) ஆலிகர் மாவட்டத்தில் இன்று காலை, கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இருவரை காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்தனர். இந்த சம்பவத்தை காவல் துறையின் அனுமதியோடு பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

வீடியோவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நோக்கி காவலர்கள் துப்பாக்கியால் குறி வைத்து சுடுவது தெரிகிறது.

முஸ்டக்கிம் மற்றும் நவுஷித் என்ற இருவர் தான் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்றும், அவர்களை போலீஸ் கொலை குற்றத்தில் சம்பந்தம் உடையதாக கருதி கடந்த சில நாட்களாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

‘கடந்த மாதம் ஆலிகர் மாவட்டத்தில் நடந்த 6 கொலை சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது. இவர்கள் மூலம் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் இந்து புரோகிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது’ என போலீஸ் தெரிவித்துள்ளது.

Advertisement