Read in English
This Article is From Nov 07, 2018

பன்றிக்காய்ச்சலுக்கு கோவையில் 2 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
தெற்கு

பன்றிக் காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Coimbatore:

கோவையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு 32 வயது மதிக்கத்தக்க ஒருவரும், 14 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காய்ச்சலை தடுக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை கதிர்வேல் என்பவர் உயிரிழந்தார். நேற்றிரவு 14 வயது சிறுமி ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். 

முன்னதாக 57 வயது முதியவர் உள்பட 2 பேர் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருந்தனர். 

Advertisement