This Article is From Aug 10, 2020

ஜெயக்குமாரின் ‘சாக்லெட் பாய்’ கமென்டுக்கு, உதயநிதியின் ‘பிளே பாய்’ பதிலடி!

'சாக்லெட் பற்றி சாக்லெட் பாய்க்குதான் தெரியும்’ - ஜெயக்குமார்

ஜெயக்குமாரின் ‘சாக்லெட் பாய்’ கமென்டுக்கு, உதயநிதியின் ‘பிளே பாய்’ பதிலடி!

‘சாக்லெட் பாய் என்பது கெட்ட வார்த்தை கிடையாது'- உதயநிதி

ஹைலைட்ஸ்

  • உதயநிதியை முன்னதாக விமர்சித்திருந்தார் ஜெயக்குமார்
  • கு.க.செல்வம் விவகாரத்தில் உதயநிதியை கேலி செய்திருந்தார் ஜெயக்குமார்
  • ஜெயக்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் உதயநிதி

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கும், திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையில் தொடர்ச்சியாக கருத்து மோதல் நடந்து வருகிறது. 

சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி, ‘நான் தீவிர அரசியலுக்கு வர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது' என்றார். 

அதை கிண்டல் செய்யும் வகையில் ஜெயக்குமார், ‘தீவிர அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் என்பது ஒரு கடல் போல. அதில் எத்தனை பேர் குதிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எத்தனை பேர் பத்திரமாக கரை சேர்வார்கள் என்பதுதான் முக்கியம்.

அண்ணா திமுக என்பது கடலில் குதித்து கரை சேர்ந்த இயக்கம். இதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், எத்தனை உதயநிதிகள் வந்தாலும், அதை சமாளிக்கும் திறனும் திராணியும் எங்களிடம் உள்ளது' என ‘பன்ச்' கொடுத்தார். 

இன்னொரு பேட்டியில் பேசிய ஜெயக்குமார், ‘திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், பாஜக பக்கம் சாய்ந்துள்ளார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், சாக்லெட் கொடுத்து செல்வத்தை ஏமாற்றிவிட்டார்கள் என்கிறார். சாக்லெட் பற்றி சாக்லெட் பாய்க்குதான் தெரியும்' என்று கேலி செய்தார். 

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய உதயநிதி, ‘சாக்லெட் பாய் என்பது கெட்ட வார்த்தை கிடையாது. அது நம்மை புகழும் சொல்தான். என்னை சாக்லெட் பாய் என்று சொன்னவர் ஒரு பிளே பாய்' என்று பதிலடி கொடுத்தார். 

.