This Article is From Oct 06, 2018

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரிடம் தவறாக நடந்த மர்ம நபர்பகள்!

உத்தரபிரதேசத்தில், குடிபோதையில் பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் ஆசிரியரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர்

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரிடம் தவறாக நடந்த மர்ம நபர்பகள்!

குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த மர்ம நபர்கள் பள்ளியின் பதிவேட்டை கிழித்துவிட்டு சென்றுள்ளனர்

Badaun (UP):

உத்தரபிரதேசம் டாட்கஜிலிருக்கும், பள்ளியில் நுழைந்து ஆசிரியையிடம் தவறாக நடந்து கொண்ட முகம் தெரியாத மர்ம நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் கொடுத்த புகாரில், குடிபோதையில் இருந்த 10 - 12 ஆண்கள் பள்ளிக்குள் நுழைந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பிறகு தான் வகுப்பறை கதவை அடைத்து அவர்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் கூறும்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பள்ளியின் பதிவேட்டை கிழித்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது, விரைவில் மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

.