Read in English বাংলায় পড়ুন
This Article is From Feb 01, 2020

Budget 2020 Live Updates: தனி நபர் வருமான வரியில் அதிரடி மாற்றம்: பட்ஜெட்டில் அறிவிப்பு!!

Union Budget 2020: பட்ஜெட்டில் உள்கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம், தனிப்பட்ட வரிகளில் சலுகை உள்ளிட்டவைகள் குறித்த அறிவிக்கப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
இந்தியா Written by ,

Budget 2020: 2008-09 நிதி ஆண்டிற்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தனி நபருக்கான வருமான வரியை குறைத்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் முதல் 7.5 லட்ச ரூபாய் வரை இருப்பவர்கள் இதுவரையில் 20 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வந்தனர். இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றவர்கள் செலுத்தி வந்த 20 சதவீத வரி தற்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரி 20 சதவீதமாகவும், ரூ. 12.5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரி தற்போது 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. 

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உடையவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பிலும் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. 

2020 மத்திய பட்ஜெட்டின் லைவ் அப்டேட்ஸ்:

Feb 01, 2020 14:09 (IST)
இரத்த அழுத்தம் குறைந்தது...

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 2 மணி 41 நிமிடங்களாக பட்ஜெட் உரையை வாசித்தார். இதனால் அவருக்கு இரத்த அழுத்தம் குறைந்தது. இன்னும் 2 பக்கங்கள் வாசிக்க வேண்டியள்ள நிலையில், ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்.
Feb 01, 2020 13:52 (IST)
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரை


இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றினார். 2.40 மணிநேரம் வாசித்ததால் சோர்ந்து காணப்பட்ட அவர், உரையை முன்னதாகவே முடித்துக்கொண்டுள்ளார்.
Feb 01, 2020 13:34 (IST)
வருமான வரிக் குறைப்பால் ஏற்படும் இழப்பு!

வருமான வரியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால் அரசுக்கு 40,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்: நிதி அமைச்சர்
Feb 01, 2020 13:16 (IST)
தனி நபர் வருமான வரியில் மாற்றம்!

7.5 - 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15 சதவிகித வரியும், 10 - 12.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவிகித வரியும், 12.5 - 15 லட்சம் ரூபாய் வரை ஈட்டுவோருக்கு 25 சதவிகித வரியும் விதிக்கப்படும்: நிதி அமைச்சர்.
Feb 01, 2020 13:12 (IST)
தனி நபர் வருமான வரி குறைப்பு!

ஆண்டுக்கு 5 முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு 10 சதவிகித வரி வசூலிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. முன்னர், இந்த வருமான அளவுக்கு 20 சதவிகித வரி வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Feb 01, 2020 13:10 (IST)
பட்ஜெட் 2020: 2021 நிதி ஆண்டில் 10% ஜிடிபி வளர்ச்சி

2020 - 2021 நிதி ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை 10 சதவிகிதமாக கணித்துள்ளோம்: நிர்மலா சீதாராமன்
Feb 01, 2020 13:02 (IST)
பட்ஜெட் 2020: எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு விற்பனை!

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்கின் ஒரு பகுதியை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2020 12:51 (IST)
வங்கியில் வைப்புத் தொகை வைப்பவர்களுக்கு…

'வங்கிகளில் வைப்புத் தொகை வைக்கும் நபர்களுக்கு காப்பிட்டுத் தொகை 1 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் சட்டம் திருத்தப்படும். இதன் மூலம் வங்கிகள் மேலும் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயலாற்ற முடியும்'
Feb 01, 2020 12:48 (IST)
‘வரி செலுத்துவோருக்கு துன்புறுத்தல் நிகழாது’


எங்கள் அரசு ஒரு விஷயத்தைத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறது. வரி கட்டும் நபர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள். நிறுவனங்கள் சட்டத்தில் சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதேபோல வேறு சில சட்டங்களிலும் திருத்தங்கள் செய்ய பரிந்துரைக்கப்படும்- நிதி அமைச்சர்
Feb 01, 2020 12:41 (IST)
‘அரசு ஊழலற்றதாக உள்ளது’

'மத்திய அரசு ஊழலற்று சுத்தமாக உள்ளது,' என பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் சொல்ல, அதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.
Feb 01, 2020 12:39 (IST)
சுத்தமான காற்றுக்காக நிதி ஒதுக்கீடு!

பெரிய நகரங்களில் சுத்தமான காற்று என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இதையொட்டி சுத்தமான காற்றுக்கான திட்டங்களுக்கு 4,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்- நிதி அமைச்சர்
Feb 01, 2020 12:35 (IST)
எஸ்/ஓபிசி-களுக்கு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு

2021 நிதி ஆண்டில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 85,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பழங்குடியினருக்கு 53,700 கோடி ரூபாய் ஒதுக்கீடும், மாற்றுத் திறனாளிகளுக்கு 9,500 கோடி ரூபாயும் ஒதுக்கீடும் செய்யப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2020 12:32 (IST)
சிறுமிகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து பற்றி…

சிறுமிகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்துக்கு குறித்து தெரிந்து கொள்ள, 6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 கோடி பேர் வீட்டில் உள்ள நிலையை அறிய முடிகிறது: நிதி அமைச்சர்
Feb 01, 2020 12:30 (IST)
வருகிறது ப்ரீபெய்டு மீட்டர்!

3 ஆண்டுகளில் ப்ரீபெய்டு பவர் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும். நுகர்வோர், தங்களுக்கு உகந்த கட்டணத்தைக் கொண்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்: நிதி அமைச்சர்
Feb 01, 2020 12:15 (IST)
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் வழித்தடம் விரைவில்…

டெல்லி - மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ் வழித்தடம் 2023 ஆம் ஆண்டு முடிக்கப்படும். அதேபோல சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் வழித்தடம் சீக்கிரம் ஆரம்பிக்கப்படும்- நிதி அமைச்சர்
Feb 01, 2020 12:07 (IST)
5 புதிய ஸ்மார்ட் நகரங்கள்!

அரசு - தனியார் பங்கீட்டில் 5 புதிய ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2020 12:06 (IST)
சுகாதாரத் துறைக்கு ரூ.69,000 கோடி!

சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு வரும்போது உலகில் அதிக பேர் வேலை செய்யும் நாடாக இந்தியா இருக்கும். இதையொட்டி, மாநில கல்வி அமைச்சர்களிடம் பேசி வருகிறோம். நகர்ப்புற நிர்வாகங்களில் புதிய பொறியாளர்களுக்கு இன்டர்ன்ஷிப் கொடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அரசுடன் பணிபுரிய விரும்பும் புதிய பொறியாளர்கள், நகர்ப்புற உள்ளூர் பொறியாளர்களுடன் பணிபுரிய ஆரம்பிக்கலாம்: நிர்மலா சீதாராமன்
Feb 01, 2020 12:02 (IST)
ஆயுஷ்மன் பாரத் திட்டத்திற்குக் கீழ்

ஆயுஷ்மன் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக மருத்துவமனைகள் சேர்க்கப்படும். டிபி தோற்கும். நாடு வெல்லும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2020 12:02 (IST)
விவசாயப் பொருட்கள் ஏற்றிச் செல்ல “கிசான் ரயில்”

"இந்திய ரயில்வே துறை 'கிசான் ரயில்'-ஐ கொண்டு வரும். இதன் மூலம் விவசாயப் பொருட்கள் வேகமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அந்த ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கும். உள்ளூர் மற்றும் சர்வதேச வழித் தடங்களில் கிசான் உடானும் உருவாக்கப்படும்," என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
Feb 01, 2020 11:53 (IST)
பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு:


"20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் பொறுத்த வசதி செய்து தரப்படும். 15 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் கிரிட் இணைக்கப்பட்ட பம்புகள் வழங்கப்படும். காலி இடங்கள் சோலார் ஆலைகள் அமைக்க பயன்படுத்தப்படலாம்,"- நிதி அமைச்சர்.



Advertisement