Read in English
This Article is From Jul 08, 2020

ஹரியான ஓட்டலில் உ.பி ரவுடி! தவறவிட்ட காவல்துறை!!

முன்னதாக விகாஸ் துபேவின் கூட்டாளியான அமர் துபே உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்பு பணிக்குழு ஹமீர்பூர் மாவட்டத்தில் என்கவுன்டர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

காவல்துறையினரால் மீட்கப்பட்ட ஒரு சி.சி.டி.வி காட்சிகள், விகாஸ் துபே என்ற குண்டர்களைப் போலவே இருப்பதைக் காட்டுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி மற்றும் ஏழு காவலர்கள் என எட்டு காவல்துறையினரை சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக விகாஸ்துபே என்கிற ரவுடியை உ.பி காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் விகாஸ் துபே சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கியிருந்ததது தெரியவந்ததை தொடர்ந்து காவல்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால், காவல்துறையினர் ஓடட்லுக்கு வருவதற்கு முன்னரே விகாஸ்துபே தப்பி சென்றுள்ளார். விகாஸ் துபே அந்த ஓட்டலில் தங்கியிருந்ததற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து டெல்லி, ஹரியானா, ஃபரிதாபாத் மற்றும் குர்கான் பகுதிகளிலும் காவல்துறையினர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக விகாஸ் துபேவின் கூட்டாளியான அமர் துபே உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்பு பணிக்குழு ஹமீர்பூர் மாவட்டத்தில் என்கவுன்டர் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement