Read in English
This Article is From Oct 09, 2018

ஒரே சமயத்தில் 25,000 காவலர்களுக்கு, தலைமை காவலர்களாக பதவி உயர்வு!

உத்தரபிரதேச அரசு ஒரே நேரத்தில் 25,000 காவலர்களுக்கு தலைமைக் காவலராக பதவி உயர்வு கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது

Advertisement
இந்தியா

உத்தரபிரதேசத்தில் 25,000 காவலர்கள் தலைமை காவலர்களாக பதவி உயர்வு

New Delhi:

திங்களன்று ஒரே சமயத்தில் 25,000 காவலர்கள் பதவி உயர்வு பெற்ற செய்தியைக் கேட்டு உத்தரபிரதேசத்தில் காவலர்கள் இனிப்புகளையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் புதிய சாதனையை உத்தரபிரதேச அரசாங்கம் படைத்துள்ளது.

இந்த செய்தி உத்தரபிரதேச மாநில போலீசாரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது.
 

அதில், 25,091 காவலர்களை தலைமைக் காவலர்களாக இன்று பதவி உயர்வு செய்கிறோம். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2017-ல் பணி உயர்வு பெற்றவர்கள் 8,910 பேர், 2016-ல் 15,803 பேர் பதவி உயர்வு பெற்றார்கள்.

கடந்த மாதம் ராஜஸ்தான் அரசு 6,000 காவலர்களுக்கு தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு கொடுத்தது.

Advertisement
Advertisement