This Article is From Oct 19, 2018

கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு; பிறப்புறுப்பை அறுத்து கொண்ட சாமியார்!

ஒரு குழு என்னை ஒரு பெண்ணுடன் தொடர்புப்படுத்தி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டனர் என சாமியார் மாதானி பாபா தெரிவித்துள்ளார்.

கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு; பிறப்புறுப்பை அறுத்து கொண்ட சாமியார்!

சாமியார் மாதானி பாபா தற்போது பாம்னா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Bamna (Uttar Pradesh:

உத்தரபிரதேசத்தில் சாமியார் ஒருவர் தன் மீது சுமத்தப்பட்ட கள்ளத்தொடர்பு புகார் காரணமாக மனவேதனையடைந்த அவர் நவராத்திரி விழாவின் போது தனது பிறப்புறுப்பை அறுத்து கொண்டார்.

பாம்னா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தற்போது சாமியார் மாதானி பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் அசிரமம் கட்டுவதை விரும்பாத ஒரு குழு தனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த குழு தன்னை ஒரு பெண்ணுடன் தொடர்புப்படுத்தி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

சாமியார் மாதானி பாபா (28), காம்சின் கிராமத்தில் வசித்து வருகிறார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக தனது பிறப்புறுப்பை அறுத்து கொண்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என பாம்னா மாவட்ட மருத்துவமனை மருத்துவர் பல்வீர் சிங் ஏன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

.