Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 26, 2018

26/11 காரணமானவர்களை தண்டியுங்கள்: பாகிஸ்தானை வலியுறுத்தும் அமெரிக்கா!

மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது

Advertisement
இந்தியா

பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், மும்பை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 166 பேர் இறந்தனர். 

Highlights

  • 2008-ல் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்தது
  • இந்தத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்
  • கொல்லப்பட்டவர்களில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர்
Washington:

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது அமெரிக்கா. 

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவிக்கையில், தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க, பாகிஸ்தானுக்கு 5 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 

மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள், மும்பை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 166 பேர் இறந்தனர். 

இது குறித்து மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பைத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், 10 ஆண்டுகள் கழித்தும் தண்டிக்கப்படாதது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையாக இருக்கும். 

Advertisement

லஷ்கர்-இ-தய்பா அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக பாகிஸ்தானுக்கு இச்சமயத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார். மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து அமெரிக்காவின் ஆர்.எஃப்.ஜே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கும் 5 மில்லியன் டாலர் வரை சன்மானம் வழங்கப்படும்' என்று கூறியுள்ளது.

Advertisement

அமெரிக்க தரப்பு இதற்கு முன்னரும் இதைப் போன்ற இரண்டு சன்மானங்களை அறிவித்திருந்தது. லஷ்கர்-இ-தய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத் தலைக்கு அமெரிக்கா முன்னர் 10 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது. 

அதே நேரத்தில் மும்பை தாக்குதலுக்கு தான் பொறுப்பில்லை என்று சயீத் தொடர்ந்து குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். 

Advertisement