Read in English
This Article is From Dec 04, 2019

முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன் உட்பட நால்வர் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெய் பிரகாஷ் என்பவர் ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரியான பிரிஜ்லால் மயூரியாவின் மகன் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

சிறுமியை தனது நண்பர்கள் நால்வருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர். (Representational)

Mirzapur (Uttar Pradesh):

ஓய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை அதிகாரியின் மகன் உட்பட 4 பேர் 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளன. சிறுமி கடத்தப்பட்ட காரில் காவல்துறையின் முத்திரையும் இருந்துள்ளது. 

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடத்தல் மற்றும் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

15 வயதான சிறுமி திங்களன்று ஹாலியாவில் தனியான இடத்தில் வைத்து கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெய் பிரகாஷ் என்பவர் ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரியான பிரிஜ்லால் மயூரியாவின் மகன் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

ஜெய் பிரகாஷ் சிறுமியை போனில் அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடத்திற்கு வரும் படி கேட்டுக் கொண்டுள்ளார். வந்த சிறுமியை தனது நண்பர்கள் நால்வருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர். 

Advertisement

காரில் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றபோது வழியில் காவல்துறையினர் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்டு தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். 

காவல்துறையினர் அனைவரையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிறுமியையும் குற்றவாளிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குற்றவாளிகள் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement