हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 21, 2020

பொறியியல் கல்லூரி மாணவர் குத்திக் கொலை! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியில், இன்னோவா காரை வழிமறிக்கும் கும்பல் அதில் முன்பக்கம் அமர்ந்திருக்கும் இருவரையும் சரமாரியாகத் தாக்குகிறது.

Advertisement
இந்தியா Edited by
Lucknow:

லக்னோவில் பட்டப்பகலில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதில், உயிரிழந்த அந்த இளைஞர் பிரசாந்த் சிங் (23), என்பதும், அவரது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில், 10 முதல் 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று பிரசாந்தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும் இன்னோவா காரை ஒரு கும்பல் வழிமறிக்கிறது. தொடர்ந்து, முன்பக்கம் அமர்ந்திருக்கும் இருவரையும் சரமாரியாக தாக்குகிறது. அப்போது, பிரசாந்தை ஒரு நபர் கத்தியால் சரமாரியாக குத்துகிறார். இதையடுத்து, ஒரு சில விநாடிகளில், காரில் இருந்து இறங்கும் பிரசாந்த் சிங், நெஞ்சை பிடித்துகொண்டு ஓடுகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, பிரசாந்த் சிங் ஒரு கட்டிடத்தினுள் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அங்கு சகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

Advertisement

பிரசாந்த் சிங் கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் போலீசாரிடம் கூறும்போது, கல்லூரி ஜூனியர் மாணவர்கள் தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

பிரசாந்த் சிங் வாரணாசியில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த புதன்கிழமையன்று நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக பிரசாந்த் பக்கத்தில் உள்ள பார்பாங்கி மாவட்டம் சென்றுள்ளார். அங்கு கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர் ஒருவருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

Advertisement

இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement