Read in English
This Article is From Nov 21, 2018

உ.பி.யில் விஐபி பாதுகாப்புக்கு ரூ.25 கோடி செலவில் சொகுசு வாகனங்கள் வாங்க திட்டம்!

உ.பி வரும் விஐபி-களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு ரூ.16.25 கோடி செலவில் 79 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது

Advertisement
இந்தியா

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 17 சொகுசு கார்கள் வாங்க திட்டம்.

Lucknow:

உத்தர பிரதேசம் வரும் விஐபி-களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஜாமர்கள் கொண்ட 112 சொகுசு வாகனங்களை வாங்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விஐபி பாதுகாப்புக்காக ரூ.25 கோடி செலவில் 112 சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

விஐபி-களுக்கு பாதுகாப்பு வழங்க ரூ.16.25 கோடி செலவில் போலீசாருக்கு 79 வாகனங்களும், ரூ.6.3 கோடி செலவில் 16 புல்லட் ப்ரூப் மற்றும் ஜாமர்கள் கொண்ட வாகனங்களும் வாங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement