Read in English
This Article is From Dec 24, 2018

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு தீ வைத்த கொடூரம்!

டெல்லியில் உள்ள மருத்துவமணைக்கு அப்பெண் கொண்டு வந்தும் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுகிழமையன்று உயிரிழந்தார்.

Advertisement
இந்தியா

டெல்லியில் உள்ள மருத்துவமணைக்கு அப்பெண் கொண்டு வந்தும் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுகிழமையன்று உயிரிழந்தார்.

New Delhi:

ரிஷிகேஷ்- உத்தரகாண்டை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், அப்பெண்ணின் மேல் தீவைத்தால் படுகாயமடைந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமணைக்கு அப்பெண் கொண்டு வந்தும் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுகிழமையன்று உயிரிழந்தார்.


கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி கல்லுரிக்கு சென்று வீடு திரும்பும்போது, 31 வயது ஆன கால் டாக்ஸ்சி ஓட்டுனர் ஒருவர் அப்பெண்னின் மேல் பெட்ரோலை ஊற்றி அவருக்கு தீ வைத்ததாகவும். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டே அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தாக ரிஷிகேஷ் போலீசார் தெரிவத்தனர்.


‘சுமார் 77 சதவீதம் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்ட அப்பெண்னை மருத்துவமணைக்கு கொண்டு வரும்போதே மிகவும் உயிருக்கு அபாயகரமான நிலையில் இருந்தார். தன் விருப்பத்தை ஏற்காமல் போனதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனவும், அப்பெண்ணின் முகத்திலும் நுரையீரலிலும் காயங்கள் அதிகமாக உள்ளதாகவும் இதனால் சிகிச்சை பலனின்றி உயிரியிழந்ததாக' போலீசார் கூறினார். 

Advertisement


மேலும் வந்த தகவல்கள் படி, அப்பெண் இறந்த செய்தி கேட்டவுடன் அவரது தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் இதே மருத்துவமணையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதை தொடர்ந்து அப்பெண்ணை தாக்கிய நபருக்குத் தக்க தண்டணை கிடைக்க வேண்டும் என பெண்கள் கல்லுரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement