This Article is From Aug 12, 2018

கருணாநிதிக்கு பாரத் ரத்னா அளிக்க வேண்டும்: வைகோ ஆதரவு

கருணாநிதிக்கு பாரத் ரத்னா அளிக்க வேண்டும் என்று முன்னனி தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

கருணாநிதிக்கு பாரத் ரத்னா அளிக்க வேண்டும்: வைகோ ஆதரவு

சென்னை: மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அக்கட்சியின் எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை வைத்திருந்தார். கருணாநிதி என்னும் தலைவருக்கு அவர் ஆற்றிய சீரிய பணிகளுக்காக பாரத் ரத்னா அளிப்பதே சரியான கௌரவமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து, கருணாநிதிக்கு பாரத் ரத்னா அளிக்க வேண்டும் என்று முன்னனி தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுகவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவதற்காக மெரினாவில் குவிந்துள்ளனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு இலவச உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சி பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.