This Article is From May 31, 2018

ஸ்டெர்லைட் ஆலயம் முடியதை எதிர்த்து மனு: வேதாந்தா நிறுவனம்

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணை வெளியிட்டதையொட்டி அதற்கு தேவையான சட்ட ரீதியான செயல்களில் வேதாந்த நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலயம் முடியதை எதிர்த்து மனு: வேதாந்தா நிறுவனம்
New Delhi: வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணை வெளியிட்டதையொட்டி அதற்கு தேவையான சட்ட ரீதியான செயல்களில் வேதாந்த நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடந்த ஸ்டர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்த 13 பேர் பலியானதால் இந்த சட்ட சிக்கல்களில் இருந்து மீள்வது சற்று சிரமம் தான். 

லண்டன் நிறுவனமான வேதாந்த நிறுவனத்தின் அதிக பங்கு பிள்ளயனர் அணில் அகர்வாளுக்கு சொந்தமானது. இந்நிறுவனம் இப்பொழுது தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உயர் அல்லது உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. 

"வேடதாந்த நிறுவனத்திற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை" என பெயர் சொல்ல விரும்பாத இருவர் தெரிவித்தனர். "வேதாந்தா சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை அதனால் சட்டபூர்வமாக  வலுவான வழக்கு உள்ளது என நம்புகிறோம்" எனவும் தெரிவித்தனர்.

இருப்புனும், போராட்டத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் மனு தாக்கல் செய்ய சரியான நேரத்தை எதிர்பாத்து இருக்கின்றனர். 

வேடதாந்தா இந்திய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர், பி ராம்நாத், ஆலயத்தை மூடினாள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

இது குறித்து பேசிய முத்த தமிழ்நாடு அமைச்சர், டி ஜெயக்குமார், "ஸ்டெர்லைட் ஆலயம் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் அதிக புகார் அளித்ததையொட்டி தான் ஆலயம் மூடப்பட்டது. அவர்கள் நாங்கள் அத்து மீறலையும் செய்யவில்லை என்று தான் தெரிவிப்பார்கள்" என்றார். 

"மக்கள் ஸ்டெர்லைடிற்கு எதிராக உள்ளனர், நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்" என கூறினார்.
 
© Thomson Reuters 2018
.