This Article is From Mar 09, 2020

2,300 அடி உயர மலை உச்சி… பாராஷூட் கட்டிக்கொண்டு குதித்த நாய்… வைரல் சம்பவம்!!

சமீபத்தில் கசூசா, 2,300 அடிக்கு மேலிருந்து குதிக்கும் வீடியோ வைரலானது

2,300 அடி உயர மலை உச்சி… பாராஷூட் கட்டிக்கொண்டு குதித்த நாய்… வைரல் சம்பவம்!!

கசூசா தொடர்ச்சியாக இதைப் போன்ற கிளர்ச்சி தரும் விஷயங்களில் பங்கேற்று, மகிழ்ச்சியில் திளைப்பதைப் பார்க்க முடிகிறது

தனது உரிமையாளருடன் 2,300 அடி உயரத்திலிருந்து பாராஷூட் மூலம் குதித்து பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது ஒரு துணிச்சல்கார நாய். கசூசா என்னும் அந்த நாய்க்கு இது புதிய விஷயமல்ல. இதைப் போன்று 40-க்கும் மேற்பட்ட முறைகள் தனது உரிமையாளர்களுடன் மலை உச்சிகளிலிருந்து குதித்துள்ளது. 

கசூசா தொடர்ச்சியாக இதைப் போன்ற கிளர்ச்சி தரும் விஷயங்களில் பங்கேற்று, மகிழ்ச்சியில் திளைப்பதைப் பார்க்க முடிகிறது. இது குறித்து கசூசாவின் உரிமையாளர், புரூனோ கூறும்போது, “நான் முதன் முதலில் இதைப் போன்ற பேஸ் ஜம்புகள் (BASE) செய்யும்போது மட்டும்தான் கசூசாவைவிட்டுத் தள்ளியிருந்தேன். 

பலமுறை நான் ஆசைப்பட்டபோதும் பேஸ் ஜம்புகளில் ஈடுபட முடியவில்லை. காரணம், நான் குதிக்கும் நேரத்தில் அவனைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்பதனால். அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது. 

அதைத் தொடர்ந்து நான், கசூசா பத்திரமாக இருக்க ஒரு கெட்டியான பிடிக்கும் பொருளை வாங்கினேன். அதைச் சரியாகப் பொருத்திவிட்டு, மலை உச்சிக்குச் சென்றபோது, அவன் சாந்தமாக இருந்தான். அப்போதிலிருந்து நாங்கள் ஒன்றாகத்தான் குதித்து வருகிறோம். 

என்னுடன் அவன் 40க்கும் மேற்பட்ட முறை குதித்துள்ளான்,” என்று பெருமையுடன் சொல்கிறார். 

சமீபத்தில் கசூசா, 2,300 அடிக்கு மேலிருந்து குதிக்கும் வீடியோ வைரலானது. இது குறித்து டெய்லி மெயில் செய்தி நிறுவனம், சுவிட்சர்லாந்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கிறது. வீடியோ முடிவில் கசூசா, அதன் உரிமையாளருக்குச் சந்தோஷ மிகுதியில் ஹை-ஃபை கொடுப்பது தெரிகிறது. 

Click for more trending news


.