বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Mar 06, 2020

“இவருக்குள்ள இவ்ளோ திறமையா!”- மெல்லிசைப் பாட்டுப்பாடி இணைய வைரலான கார் டிரைவர்!

தாஸ்குப்தா, வீடியோவை ஷேர் செய்ததிலிருந்து 54,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 1,200-க்கும் மேற்பட்ட முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

பலரும், தங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ குறித்து கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். 

கொல்கத்தாவைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர், இந்துஸ்தானி இசையில் பாடும் ஒரு பாட்டு, இணையத்தைக் கலக்கி வருகிறது. பிரிந்தா தாஸ்குப்தா என்னும் ஒருவர், கொல்கத்தாவில் உபர் கார் சேவை மூலம் பயணம் செய்துள்ளார். அப்போது ஒரு பாட்டை முணுமுணுத்தபடி பயணப்பட்டுள்ளார். இது காரை ஓட்டிய டிரைவரான ஆர்யன் சோனியை ஈர்த்துள்ளது. 

“கார் டிரைவர், உங்களுக்கு இசையில் ஆர்வம் அதிகமா?” எனக் கேட்டார். தாஸ்குப்தா அதற்குச் சிரிப்பைப் பதிலாகக் கொடுத்துள்ளார். தொடர்ந்து தனக்கும் இசையில் நாட்டம் அதிகம் என்று சொல்லி பாட்டு ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளார் ஆர்யன் சோனி. அதைத்தான் தாஸ்குப்தா, தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதற்குப் பலரும் ‘வாவ்' போட்டு வருகிறார்கள். 

“இதுதான் அவரின் பதில்” என்று தாஸ்குப்தா எழுதி வீடியோவை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பாருங்கள்:

தாஸ்குப்தா, வீடியோவை ஷேர் செய்ததிலிருந்து 54,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. 1,200-க்கும் மேற்பட்ட முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. பலரும், தங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ குறித்து கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

“இது மிகப் பிரமாதம்,” என்று ஒருவர் கருத்திட, “இது அவ்வளவு நன்றாக உள்ளது,” என்கிறார் இன்னொருவர். 

சாமானிய மக்கள் பாட்டுப் பாடி இணைய வைரலாவது இது முதன் முறையல்ல. முன்னதாக ராணு மோண்டல் என்னும் பெண், மேற்கு வங்க ரயில் நிலையத்தில் தன் அழகு குரலால் பாடி வந்துள்ளார். அதைப் பதிவு செய்து இணையத்தில் ஒருவர் ஏற்ற, அவர் தேசிய புகழ் பெற்றார். 

Advertisement


 

Advertisement