Read in English
This Article is From Jan 28, 2020

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! செல்போனை பிடிங்கிக் கொண்டு சென்ற சூப்பர் ஸ்டார் நடிகர்!! #Video

தனது புதிய படமான ராதேவின் படப்பிடிப்புக்காக சல்மான் கான் கோவா வந்துள்ளார்.

Advertisement
Entertainment Edited by

சல்மான் கான் தற்போது ராதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

New Delhi:

பிரபல இந்தி நடிகர் சல்மான் கானிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அவரது செல்போனை சல்மான் கான் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் இணைத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோவை அதிகளவு பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் சல்மான் கானை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சல்மான் கான் தற்போது ராதே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காட்சிகளுக்காக அவர் இன்று கோவா வந்தார். அப்போதுதான் இந்த சம்பவம் விமான நிலையத்திற்கு வெளியே நடந்திருக்கிறது. 

விமான நிலையத்திலிருந்து சல்மான் கான் வெளியே வருகிறார். அவரிடம் ரசிகர் செல்பி எடுக்க முயற்சி செய்ய, செல்போனை கோபத்துடன் பறித்துக் கொண்டு சல்மான் கான் செல்கிறார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. 
 

Advertisement

:

Advertisement

அனுமதியின்றி செல்பி எடுக்க முயன்றதால் சல்மான் கான் கோபப்பட்டதாக கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு சல்மான் கான் 1994-ம் ஆண்டில் நடித்து வெளியான ஹம் ஆப்கே ஹைன் கோன் என்ற திரைப்படத்தின் சிறப்புக் காட்சி கடந்த ஆண்டு திரையிடப்பட்டது. அப்போது ரசிகை ஒருவர் சல்மானின் கைகளைப் பற்றிக் கொண்டார். இதன்பின், பாதுகாவலர்கள் ரசிகையை பிடித்து அப்புறப்படுத்தினர். அப்போது அந்த ரசிகையிடம் சல்மான் ஏதும் பேசாமல் சென்றார். 

Advertisement

தற்போது ராதே என்ற படத்தில் சல்மான் நடித்து வருகிறார். அவருடன் இந்த படத்தில் ரன்தீப் ஹூடா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை பிரபு தேவா இயக்குகிறார். இந்தாண்டு ஈத் பண்டிகையின்போது படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 
 

:

Advertisement

இந்த படத்தை தவிர்த்து சல்மான் கான் கபி ஈத் கபி தீவாலி, கிக் 2, வான்ட்டட் 2 படங்களில் நடித்து வருகிறார். 

Advertisement