Read in English
This Article is From Jul 20, 2020

ஏங்கி ஏங்கி பருக நீர் கேட்ட அணில்… உதவிய நல் உள்ளம்… மனதை உருக்கும் வீடியோ!!!

தாகத்தால் பரிதவித்த அணிலுக்கு இரக்கப்பட்டும், அதற்கு உதவி புரிந்த நபருக்குப் புகழாரம் சூட்டியும் பலரும் வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். 

Advertisement
விசித்திரம் Edited by

ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவுக்குப் பல லட்சம் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. ரெடிட் தளத்தில் மட்டும் இந்த வீடியோவுக்கு 30 லட்சம் பார்வைகளுக்கு மேல் குவிந்துள்ளன. 

விலங்குகள் குறித்தான சில வீடியோக்கள் நம் கண்களில் நீரை வரவழைத்துவிடும். அப்படியொரு வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலம் வந்து நெட்டிசன்களை உருக வைத்துள்ளது. 

ரெடிட் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்ட வீடியோவில் ஒரு அணில், ஒரு நபரைப் பின் தொடர்ந்து வருகிறது. தன் கைகளை கூப்பி, ஏங்கி ஏங்கி எதையோ கேட்கிறது. அதன் பார்வை முழுவதும் அந்த நபர் வைத்திருக்கும் தண்ணீர் பாட்டில் மேல்தான் உள்ளது. முதலில் அணிலை உதாசீனப்படுத்தும் நபர், ஒரு கட்டத்தில் நிற்கிறார். பரிதவிக்கும் அணிலின் முகத்தை நோக்குகிறார். பாட்டிலைத் திறந்து அணிலுக்கு நீர் கொடுக்க, மடக் மடக்கென்று முழு புட்டியையும் தீர்த்து விடுகிறது அணில். அவ்வளவு தாகம். பின்னர் அங்கிருந்து நன்றியுணர்வுடன் விடை பெறுகிறது அந்த ஜீவன். 

தாகத்தால் பரிதவித்த அணிலுக்கு இரக்கப்பட்டும், அதற்கு உதவி புரிந்த நபருக்குப் புகழாரம் சூட்டியும் பலரும் வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். 

வீடியோவைப் பார்க்க:

ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவுக்குப் பல லட்சம் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. ரெடிட் தளத்தில் மட்டும் இந்த வீடியோவுக்கு 30 லட்சம் பார்வைகளுக்கு மேல் குவிந்துள்ளன. 

Advertisement

திரைப்படத் தயாரிப்பாளரான நிலா மதாப் பாண்டா இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘என் இதயத்தை நொறுக்குகிறது' என்று உருகுகிறார். 

இன்னொரு ட்விட்டர் பயனர், ஒரு மனிதர் கையிலிருந்து உணவைச் சாப்பிடும் அணிலின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘இவற்றுக்கு எப்படி நட்பாக இருப்பது என்பது தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார். 

Advertisement