புலியைக் கூண்டில் பார்த்தாலே மிரட்சியாக இருக்கும். அதுவே கட்டுக்கடங்காமல் காட்டில் பார்த்தால்… அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் ட்விட்டர் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்திய வனத் துறை அதிகாரியான சுசாந்தா நந்தா, இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மத்திய புலிகள் காப்பகத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகச் சொல்லும் அவர், சரியாக எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்துத் தெரியப்படுத்தவில்லை.
வெறும் 17 நொடிகளே ஓடும் அந்த வீடியோவில், ஒரு திறந்தவெளி ஜீப்பில் சுற்றுலாப் பயணிகள் சிலர் உள்ளனர். புலி தூரத்தில் இருப்பதைப் பார்த்து அவர்கள் பரவசமடைகின்றனர். அதை ஒருவர் படம் பிடிக்கிறார். புலி மெதுவாக வாகனத்துக்கு அருகே வருகிறது. அப்போது ஒரு ராஜ கர்ஜனை செய்கிறது. வண்டியை நோக்கி புலி கர்ஜனை செய்து கொண்டே வருகிறது. ஜீப்பில் இருப்பவர்கள், ‘வண்டியை ரிவர்ஸ் எடு' என்று சொல்வது கேட்கிறது.
வீடியோவைப் பகிர்ந்திருந்த நந்தா, “அந்தப் பகுதி தனக்குச் சொந்தமெனக் கர்ஜனையின் மூலம் காண்பிக்கிறது புலி,” என்று எழுதியிருந்தார்.
வீடியோவை கீழே பார்க்கவும்:
இதுவரை வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 3,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் மிரளவைக்கும் இந்த வீடியோ குறித்து இன்பம் கலந்த அதிர்ச்சியில் கருத்திட்டு வருகின்றனர்.