বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 21, 2019

நெடுநாட்களாக தேடப்பட்டிருந்த முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது!

100க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஷாம் சுந்தர் என்று அழைக்கப்பட்ட ராஜூ இருதியாக பிடிபட்டார்.

Advertisement
நகரங்கள் Edited by (with inputs from ANI)

ஷாம் சுந்தர் என்று அழைக்கப்பட்ட ராஜூ இருதியாக பிடிபட்டார்.

New Delhi:

பல வழக்குகளில் முக்கிய குற்றிவாளியான ராஜூ ஹாக்லா, நெடுநாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் டெல்லி போலீசார் நடத்திய என்கவுண்டர் வேட்டையில் கையும் களவுமாக சிக்கினார். 

டெல்லி குற்றப்பிரிவை சேர்ந்த போலீசார் நடத்திய இந்த தேடுதல் வேட்டையில் ஷாம் சுந்தர் என்று அழைக்கப்பட்ட ராஜூ பிடிபட்டார்.

வங்கிக்கொள்ளை, கொலை, திருட்டு மற்றும் கடத்தல் என சுமார் 100க்கும் மேற்பட்ட  வழக்குகளில் ராஜூவிற்கு தொடர்பு இருந்தது. இப்படி பதிவான வழக்குகளில் ஆயுதம் விற்பனை செய்ததாக பதிவான வழக்குகளே அதிகம். 

இந்தநிலையில், ராஜூ பிடிபட்ட போது அவனிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement