Read in English
This Article is From Aug 12, 2019

தெலுங்கானாவில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை

காவல்துறையினர் கொடுத்த அறிக்கையின் படி, ஒரு மைனர் உட்பட இருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Telangana Edited by

இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக வட்ட அலுவலர் தெரிவித்தார். (Representational)

Warangal :

தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு நாளைக்குப் பின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் கொடுத்த அறிக்கையின் படி, ஒரு மைனர் உட்பட இருவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

“இருவரும்  சிறுமியை  ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மறுநாள் காலையில், அவரது உடல் கூறையில் தூக்குப் போட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்று வட்ட அலுவலர் ஏஎன்ஐ நிறுவனத்திடம் கூறினார்.

இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக வட்ட அலுவலர்  தெரிவித்தார். 

Advertisement
Advertisement