This Article is From Jun 21, 2018

தமிழ்நாட்டில் கிணற்றில் விழுந்த 3 யானைகள் 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டது

கடம்பூர் காட்டிலுள்ள கிராமத்து வாசிகள் பிளீரளை கேட்டு சென்றுப் பார்த்தால் ஐந்தடி தண்ணீரில் யானைகள் விழுந்து கிடந்தன

Erode, Tamil Nadu: நேற்று  காலை கடம்பூர் காட்டிலுள்ள கிராமத்து வாசிகள் பிளீரளை கேட்டு சென்றுப் பார்த்தால் ஐந்தடி தண்ணீரில் யானைகள் விழுந்து கிடந்தன. பிறகு வன ஊழியர்களிடம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு,தமிழ்நாடு: காட்டை ஒட்டியிருக்கும் கிராமத்தில் 17 அடி ஆழக் கிணற்றில் விழுந்த மூன்று யானைகள் சில மணிநேரத்தில் மீட்கப்பட்டன என அதிகாரிகள் கூறினர்.

வன ஊழியர்கள் மீட்புக் குழுவுடன் இடத்திற்கு விரைந்தனர்.

மண்வெட்டிகளை பயன்படுத்தி கிணற்றை சுற்றியுள்ள இடத்தை தோண்டி ஒரு சாய்வு உருவாக்கினர். அதன் வழியாக யானைகள் கிணற்றிலிருந்து மேலே ஏறிவந்தது என ஊழியர்கள் கூறினர்.

மீட்பு நடவடிக்கை ஆறு மணிநேரம் நீடித்தது.
.