Read in English
This Article is From Feb 13, 2020

செய்தி தொகுப்பாளருக்கு நேரலையில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி! - வீடியோ

அவரது வெற்றி குறித்து செய்தி அறை ஸ்ரீஜா ஷியாமுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை.

Advertisement
தமிழ்நாடு Edited by

தனது வெற்றி செய்தியை அறிந்த ஸ்ரீஜாவால் ஒரு சில விநாடிகள் எதுவும் பேச முடியவில்லை.

தான் விருது வென்ற செய்தியை நேரலையில் தெரிந்துகொண்ட செய்தி தொகுப்பாளர் ஒரு சில நிமிடங்கள் இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்ற சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாள செய்தித் தொலைக்காட்சியான மாத்ரூபூமியின் தலைமை இணை ஆசிரியரான ஸ்ரீஜா ஷியாமுக்கு கேரள அரசின் 2018-ம் ஆண்டின் சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது கிடைத்துள்ளது. இந்த தகவலை ஸ்ரீஜா நேரலையில் தான் செய்தி வாசிக்கும் போது தனது பெயரை தானே வாசிக்கும் போது தான் அறிந்துள்ளார்.

ஸ்ரீஜாவின் வெற்றி குறித்து தகவல் அறிந்த மாத்ரூபூமி தொலைக்காட்சி, அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த தகவலை முன்கூட்டியே ஸ்ரீஜாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளது. 

இந்நிலையில், வழக்கம்போல் தனக்கு முன் இருக்கும் திரையைப் பார்த்து நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா அதில் தனக்கு விருது வழங்கப்பட்ட தகவலை பார்த்து அதிர்ச்சியில் திகைத்து நின்றார். விலைமதிப்பில்லாத அவரின் ரியாக்சன் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவின், தொடக்கத்தில் விருது வென்றதை அறிந்து திடுக்கிட்ட ஸ்ரீஜா ஷியாம் பிறகு, விருது குறித்து மீண்டும் தொடர்ந்து படிக்கிறார். அவரது குரலில் மகிழ்ச்சி தெளிவாக வெளிப்படுகிறது. வீடியோவின் கடைசி சில நொடிகளும் அவரிடம் இருந்து அளிவில்லா புன்னகை வெளிப்படுகிறது. 

Advertisement

அந்த வைரல் வீடியோ இங்கே:

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலே அதனை 300க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர். மேலும், அந்த செய்தி தொகுப்பாளருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விருது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளத்திற்கு ஸ்ரீஜா ஷியாம் அளித்த தகவலில், செய்தி ஒளிபரப்பின் போது சக ஊழியர்கள் அனைவரும் தான் ஆச்சரியமடைந்ததை கண்டு சிரித்ததால், அவரும் ஒளிபரப்பின்போது சிரித்தாக தெரிவித்துள்ளார். மேலும், "விருது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement