বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 22, 2018

மிரட்டல் விடுத்த மேற்கு வங்க பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

பாஜகவில் இருந்து வெளியேறி பின்னர் சிவசேனாவில் சேர்ந்த அசோக் சர்கார் என்பவர் புகார் அளித்திருக்கிறார்.

Advertisement
இந்தியா

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்

Kolkata :

மேற்கு வங்கத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவராக இருப்பவர் திலீப் கோஷ். இவர் கடந்த வியாழன் அன்று அரம்பாக்கில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்.  அப்போது எதிர் தரப்பு அரசியல் தலைவர்களுக்கு அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதனை பாஜகவில் இருந்து பின்னர் சிவசேனா கட்சிக்கு தாவிய அசோக் சர்கார் என்பவர் அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில், திலீப் கோஷ் விடுத்த மிரட்டலால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு அளிக்குமாறும் அசோக் சர்கார் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement