This Article is From Sep 06, 2018

குட்கா விவகாரம் - என்ன அது? எப்போது தொடங்கியது? யார் யாருக்கெல்லாம் தொடர்பு?

குட்கா விவகாரம், முதன் முதலில் ஜூலை 2016-ம் ஆண்டு தான் தலை எடுத்தது

குட்கா விவகாரம் - என்ன அது? எப்போது தொடங்கியது? யார் யாருக்கெல்லாம் தொடர்பு?
New Delhi:

பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள குட்கா விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் ஆகியோர் இல்லத்தில் சி.பி.ஐ சோதனை நடத்திவருகிறது. அதுமட்டும் இல்லை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை என அதிகாரிகள் பலர் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜும் இதில் அடங்குவார். கிட்டத்தட்ட 40 இடங்களில் சோதனை நடக்கிறது.

என்ன அது குட்கா விவகாரம்?

2013-ம் ஆண்டு தமிழக அரசால், குட்கா,பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், சட்ட விரோதமாக அவற்றின் விற்பனை நடந்து வந்தது.

குட்கா விவகாரம், முதன் முதலில் ஜூலை 2016-ம் ஆண்டு தான் தலை எடுத்தது. தமிழகத்தில், புகையிலை பொருட்கள் தயாரிக்கும் தொழிலதிபரான மாதவ் ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 250 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி எய்ப்பு செய்தது, அந்த சோதனையில் தெரிய வந்தது.
சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், ஏப்ரல் மாதம் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

மே மாதம், பெயர் குறிப்பிடப்படாத அரசு அதிகாரிகள், மத்திய கலால் வரித் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது சி.பி.ஐ சோதனை நடந்த வருகிறது.

குட்கா விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, அமைச்சர் விஜய பாஸ்கரை பதவி விலக வேண்டும் என தி.மு.க வலியுறுத்தி வருகிறது.

.