This Article is From May 07, 2020

தமிழகத்தில் சென்னையை அடுத்து எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது?

மே 6 ஆம் தேதி நிலவரப்படி சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னையை அடுத்து எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது?

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் நேற்று மட்டும் 31 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்
  • இதுவரை தமிழகத்தில் 1,516 பேருக்கு கொரோனா தொற்று குணமாகியுள்ளது
  • சென்னைதான் தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 324 பேர். ஒட்டுமொத்த அளவில் 4,829 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,516 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 3,275 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 348 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 1,952 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழகத்திலேயே சென்னைதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (06-05-2020):

அரியலூர் - 222

செங்கல்பட்டு - 145

சென்னை - 2328

கோவை - 146

கடலூர் - 325

தர்மபுரி - 2

திண்டுக்கல் - 107

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 53

காஞ்சிபுரம் - 87

கன்னியாகுமரி - 17

கரூர் - 45

கிருஷ்ணகிரி - 4

மதுரை - 111

நாகை - 45

நாமக்கல் - 76

நீலகிரி - 13

பெரம்பலூர் - 40

புதுக்கோட்டை - 3

ராமநாதபுரம் - 21

ராணிப்பேட்டை - 43

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 51

தஞ்சை - 63

தேனி - 51

நெல்லை - 65

திருப்பத்தூர் - 20

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 129

திருவண்ணாமலை - 42

திருவாரூர் - 32

திருச்சி - 57

தூத்துக்குடி - 29

வேலூர் - 28

விழுப்புரம் - 164

விருதுநகர் - 35

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (06-05-2020):

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 49

சென்னை - 330

கோவை - 140

கடலூர் - 26

தர்மபுரி - 0

திண்டுக்கல் - 75

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 4

காஞ்சிபுரம் - 11

கன்னியாகுமரி - 13

கரூர் - 42

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 48

நாகை - 44

நாமக்கல் - 51

நீலகிரி - 9

பெரம்பலூர் - 4

ராமநாதபுரம் - 12

ராணிப்பேட்டை - 37

சேலம் - 24

சிவகங்கை - 12

தென்காசி - 12

தஞ்சை - 43

தேனி - 42

நெல்லை - 58

திருப்பத்தூர் - 17

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 50

திருவண்ணாமலை - 10

திருவாரூர் - 26

திருச்சி - 47

தூத்துக்குடி - 26

வேலூர் - 16

விழுப்புரம் - 29

விருதுநகர் - 22

சென்னையில் தற்போது 1,952 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தில் 298 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 216 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 133 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 93 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 79 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 பேருக்கும் கொரோனா வைரஸிலிருந்து மீள தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மே 6 ஆம் தேதி நிலவரப்படி சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

.