This Article is From Sep 30, 2019

“சென்னையின் Freshness-க்கு காரணம்…”- PM Modi சொன்ன சுவாரஸ்ய பதில்!

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கு முன்னர் PM Modi, சிங்கப்பூருடன் இணைந்து நடத்தப்பட்ட ‘Hackathon’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

Advertisement
தமிழ்நாடு Edited by

இன்று காலை விமான நிலையம் வந்திறங்கிய PM Modi-க்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

சென்னையில் இருக்கும் இந்திய தொழிநுட்ப கழகமான ஐஐடி-யில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கு முன்னர் அவர் சிங்கப்பூருடன் இணைந்து நடத்தப்பட்ட ‘Hackathon' நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் அவர் சிறப்புரை ஆற்றினார். 

பிரதமர் மோடி பேசுகையில், “சென்னையில் நான் உரையாற்றும்போது, யார் முகத்திலும் சோர்வுத் தன்மையைப் பார்ப்பதில்லை. அதற்கு ஒரு விஷேஷ காரணம் இருப்பதாக நினைக்கிறேன். அது தமிழர்கள், சென்னையில் சாப்பிடும் ஸ்பெஷல் காலை உணவுதான் காரணம் என்று நினைக்கிறேன். இட்லி, தோசை, வடை, சாம்பார் என எல்லாம் புத்துணர்வு கொடுக்கும் வகையில் இருப்பதும் இங்கிருப்பவர்கள் காலையில் விழிப்புடன் இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது. எனக்கும் அந்த உணவுகள் பிடிக்கும். சென்னையின் இன்னொரு குணாதிசயம், இங்கு உபசரிக்கப்படும் விதம். தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பான குணமாகும்” என்று தமிழர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசினார். 

இன்று காலை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

இதேபோல், பாஜக சார்பிலும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பலர் வரவேற்றனர். 

இதன்பின் விமான நிலையத்தில் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டின் பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னை வந்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்பொழுது, தமிழ் மொழியின் தொன்மை குறித்து அமெரிக்காவில் மற்றும் ஐ.நா. பொது சபையில் பேசினேன்.

இதனால், தமிழ் மொழி குறித்துதான் தற்போது அமெரிக்க ஊடகங்கள் அதிக அளவில் செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர்கள் நலமுடன் உள்ளனர். இந்தியாவை பற்றிய பெரும் எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களுக்கு உள்ளது' என்று கூறினார்.

Advertisement