This Article is From Apr 30, 2020

உயரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை; தமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன? - விரிவான விவரம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்கள்.

Advertisement
தமிழ்நாடு Written by

தமிழகத்தில் மொத்தமாக 1,210 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Highlights

  • தமிழகத்தில் இதுவரை 2,162 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • அதில் 1,210 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
  • தற்போது 922 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் நேற்று 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 94 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,162 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,210 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 922 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்கள். மொத்தமாக 27 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள். 

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 215 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 536 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மேலும் மாநில அளவில், 30,580 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அரசின் தனிமைப்படுத்ததலுக்குக் கீழ் 48 பேர் உள்ளனர். 

Advertisement

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (29-04-2020):

அரியலூர் - 6

Advertisement

செங்கல்பட்டு - 73

சென்னை - 768

Advertisement

கோவை - 141

கடலூர் - 26

Advertisement

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

Advertisement

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 9

காஞ்சிபுரம் - 23

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 79

நாகை - 44

நாமக்கல் - 61

நீலகிரி - 9

பெரம்பலூர் - 7

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 15

ராணிப்பேட்டை - 39

சேலம் - 31

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சை - 55

தேனி - 43

நெல்லை - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 54

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 50

விருதுநகர் - 32

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (29-04-2020):

அரியலூர் - 4

செங்கல்பட்டு - 43

சென்னை - 210

கோவை - 121

கடலூர் - 18

திண்டுக்கல் - 66

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 3

காஞ்சிபுரம் - 9

கன்னியாகுமரி - 10

கரூர் - 41

மதுரை - 40

நாகை - 31

நாமக்கல் - 49

நீலகிரி - 9

பெரம்பலூர் - 1

ராமநாதபுரம் - 10

ராணிப்பேட்டை - 33

சேலம் - 20

சிவகங்கை - 10

தென்காசி - 5

தஞ்சை - 33

தேனி - 36

நெல்லை - 53

திருப்பத்தூர் - 17

திருப்பூர் - 91

திருவள்ளூர் - 30

திருவண்ணாமலை - 10

திருவாரூர் - 15

திருச்சி - 45

தூத்துக்குடி - 25

வேலூர் - 14

விழுப்புரம் - 23

விருதுநகர் - 16
 

Advertisement