This Article is From Jul 22, 2020

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் அளிக்கலாமா என ஆலோசனை நடத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளும் முடங்கின. கிட்டதட்ட இரண்டு மாதங்களாக நீடித்த ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தள்ளிப்போனது. 

தொடர்ந்து, ஜூன் மாதத்தில் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவதில் அரசு தீவிரம் காட்டி வந்தது. இதற்காக இரண்டு முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்களின் வலியுறுத்தி வந்தனர். 

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலனை காக்க 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்தது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் அளிக்கலாமா என ஆலோசனை நடத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனோ வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னர், பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.