This Article is From Jan 21, 2019

பாஜகவை மோசமாக சித்தரிக்கும் உரிமையை யார் கொடுத்தது? தமிழிசை ஆவேசம்!

பாஜகவை மோசமாக சித்தரிக்கும் உரிமையை யார் கொடுத்தது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமடைந்தார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியை சுட்டி காட்டி இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்துமத துவேசம் என்ற பெயரில் பெண்களை மிக மோசமாக சித்தரிக்கும் உரிமையை யார் கொடுத்து? இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

இப்படிப்பட்ட கண்காட்சிகளையும், இந்து மதத்தையும், பெண்களையும், பிரதமர் மோடியையும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் மோசமாக சித்தரித்துள்ளனர்.

இனி பொறுத்துக் கொள்ளப்போவதில்லை. வேண்டுமென்றே மதச்சார்பின்மையை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு மதக்கலவரத்தை தூண்டுவதற்காகவே இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

Advertisement


 

Advertisement