Alwar:
ராஜஸ்தான் மாநிலம் ஆள்வார் பகுதியில் தலித் பெண்ணொருவர் மருத்துவமனையில் இரண்டு ஆண்களால் வன்புணர்வு செய்யப்பட்டார்.
மே 7 -ம் தேதி மருத்துவமனையில் ராம் நிவாஸ் என்ற நபர் தன்னை வன்புணர்வு செய்ததாககவும் அதற்கு கிரிராஜ் பிரசாத் என்பவர் உதவியதாக புகார் அளித்துள்ளார். மே 5 ம் தேதி தனது கர்ப்பிணி மருமகளை மருத்துவமனையில் அனுமதிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். மே 7 அன்று கிரிராஜ் பிரசாத் என்ற நபர் அவரை டெலிவரி அறைக்கு அழைத்துச் சென்றார். ராம் நிவாஸ் என்பவர் முன்கூட்டியே அங்கிருந்ததாக தெரிவித்தார்.
ராம் நிவாஸ் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபோது கிரிராஜ் பிரசாத் அவரது பெண்ணின் கையை பிடித்து கொண்டு வாயை அடைத்துள்ளார் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
COMMENTS
Advertisement