This Article is From Apr 17, 2019

மனைவியை கத்தியால் குத்தி தலையை துண்டித்த கணவன் கைது

மனைவி தனக்குத் துரோகம் செய்வதாக முனியப்பனுக்கு சந்தேகம் ஏற்றபட்டுள்ளது.

Advertisement
தெற்கு

காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் (Representational)

Erode, Tamil Nadu:

மனைவியைக் கொலை செய்து தலையைத் துண்டித்து பையில் வைத்து கால்வாயில் வீசிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த முனியப்பன் (28) நிவேதா (19) ஆகியோர் ஈரோட்டுக்கு அருகில் உள்ள மேட்டுக்கடியில் தங்கியிருந்தனர். 

இந்த தம்பதியினர் 8 மாதத்திற்கு முன் திருமணம் முடிந்திருந்த நிலையில் மனைவி தனக்குத் துரோகம் செய்வதாக முனியப்பனுக்கு சந்தேகம் ஏற்றபட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு நடந்த சண்டையில் கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளான். 

கத்திகுத்தினால் நிலைகுலைந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து பையில் வைத்து உடலை கோணியில் வைத்துக் கட்டி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளான். அந்தப் பெண்ணின் கால் வெளியில் தெரிந்துள்ளது  எச்சரிக்கை அடைந்து  பொதுமக்கள் முனியப்பனை விரட்டி பிடித்துள்ளனர். 

Advertisement

அவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். முனியப்பன் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Advertisement