This Article is From Nov 07, 2018

ஐதராபாத் மெட்ரோ நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்

முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

ஐதராபாத் மெட்ரோ நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்

லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அந்த பெண்னை அருகில் உள்ள மருத்துவமனையில் சக பயணிகள் அனுமதித்தனர்.

Hyderabad:

இன்று காலையில், ஐதராபாதில் அமைந்திருக்கும், விக்டோரியா மெமோரியல் (victoria memorial) மெட்ரோ நிலையத்தில் உள்ள நடைமேடையில் இருந்து 25 வயது பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அந்த பெண்னை அங்கிருந்த இருந்த பயணிகள் மற்றும் ஹெச்.எம்.ஆர்.எல் நிர்வாகிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அப்பெண்னை அனுமதித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

.