हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 24, 2019

டெல்லியில் பைக்கில் சென்றபடி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது!!

கைது செய்யப்பட்டவரின் பெயர் ரமன்ஜீத் கவுர் என்றும் அவர் நிஹால் விகார் பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
இந்தியா Edited by

சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவ காட்சி.

New Delhi:

டெல்லி சாணக்யபுரி பகுதியில் 53 வயது பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற 33 வயது பெண் மற்றும் இன்னொரு நபர் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போலீசாரின் கவனத்தை திருப்புவதற்காக பைக்கில் சென்ற அந்தப் பெண், ஆணைப் போன்று உடை அணிந்திருக்கிறார். அவர் ரமன்ஜீத் கவுர் என்றும் அவர் நிஹால் விகார் பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பைக் மற்றும் ஸ்கூட்டர், 53 வயது பெண்ணிடம் பறிக்கப்பட்ட பர்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் கடந்த 8-ம்தேதி நடந்தது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி பின்னர் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 

செல்போன் பர்சை பறித்தபோது, அதனை விடாத பெண் தரையில் தள்ளப்பட்டார். அவரை கொள்ளையர்கள் சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்றனர். இந்தக் காட்சிகள் டெல்லி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

Advertisement

இதையடுத்து அருகில் உள்ள கட்டிடங்களின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து டெல்லி போலீசார் வழிப்பறிக் கொள்ளையர்களை தேடினர். இதில் கவுரும், ஜக்ஜீத் சிங் என்ற கொள்ளையனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கவுர் ஏற்கனவே திருமணம் முடித்தவர். அவரது கணவரான தேஜேந்தர் சிங் கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருக்கிறார். 

Advertisement
Advertisement