This Article is From Dec 29, 2018

வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு தீ வைத்த கொடூரம்!

நொய்டாவில் உள்ள காலுபுரா கிராமத்தில் கடந்த புதன்கிழமையன்று இந்த பயங்கரம் நடந்தது.

வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு தீ வைத்த கொடூரம்!

குற்றம் சாட்டப்பட்டுள்ள மாப்பிள்ளை வீட்டினர் தலைமறைவாகியுள்ளனர்.

Noida:

கிரேட்டர் நொய்டாவில் கடந்த வியாழக்கிழமையன்று போலீசாருக்கு வந்த தகவல் படி, 30 வயது பெண்மணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது மட்டுமில்லாமல் அப்பெண்ணின் கணவர் வீட்டார் அப்பெண்ணுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். நொய்டாவில் உள்ள காலுபுரா கிராமத்தில் கடந்த புதன்கிழமையன்று இந்த பயங்கரம் நடந்தேறியது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மாப்பிள்ளை வீட்டினர் தப்பியோடி விட்டனர்.

காலுபுரா கிராமத்தில் கடந்த புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் அங்குள்ள பெண்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் “பாதிகப்பட்ட பெண்ணின் அண்ணன் தனது தங்கையை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளார் எனவும். திருமணமாகி 6 வருடங்களாக  உள்ள நிலையில் இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பலத்த தீ காயங்களால் அவர் டெல்லியில் உள்ள சாஃவுடாஜூங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என போலீஸ் அதகாரி சுனால் குமார் சிங் கூறினார். 

மேலும் அப்பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் ஒரு நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் உள்ள வகுப்பு 307 (கொலை முயற்சி பிரிவு) மற்றும் வரதட்சணை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது கூடுதல் தகவல்.

அதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள மாப்பிள்ளை வீட்டினர் தலைமறைவாகியுள்ளனர்.

.