Read in English
This Article is From Oct 15, 2019

வாக்குவாதத்தால் ஏற்பட்ட பிரச்னை! மண்ணென்ணெய் ஊற்றி மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!!

மனைவியை எரித்துக் கொல்ல முயன்றபோது, கணவனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Advertisement
இந்தியா Edited by

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார்.

Muzaffarnagar:

வாக்குவாதத்தால் பிரச்னை முற்றிப்போய் கோபத்தின் உச்சிக்கு சென்ற கணவன், மனைவியை மண்ணென்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 

முசாபர் நகரை சேர்ந்த தினேஷ் சிங் என்பவர் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி இருந்தார்.

கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. 

இதில் டென்ஷனின் உச்சிக்கு சென்ற கணவர் தினேஷ் சிங், மண்ணென்ணெயை மனைவி மீது ஊற்றி அவரை தீயிட்டுக் கொளுத்தினார். அப்போது இவர் மீதும் தீப்பிடித்தது. இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மனைவி அனுராதாவின் உயிர் சிகிச்சை பலனின்றி பிரிந்தது. தீக்காயம் அடைந்திருக்கும் கணவர் தினேஷ் சிங் சிகிச்சை பெற்று வருகிறார். 

Advertisement