This Article is From Dec 31, 2018

ஆண் குழந்தைக்காக 10-வது பிரசவத்தில் உயிரிழந்த பெண்

இவருக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என்ற நோக்கில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. குடும்ப அழுத்தம் காரணமாக அடுத்தடுத்த பிள்ளைகளை பெற்றுள்ளார். 

ஆண் குழந்தைக்காக 10-வது பிரசவத்தில் உயிரிழந்த பெண்

இவருக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர். 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். (Representational Image)

Mumbai:

மகாராஷ்டிரா மாநில பீட் மாவட்டத்தில் 38 வயதுடைய பெண்ணொருவர் தன்னுடைய 10-ஆவது பிரசவத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார். 

மும்பையிலிருந்து 380 கி.மீ தூரத்தில் உள்ள பீட் என்னும் நகரில் உள்ள மஜல்கான் என்னுமிடத்தில் உள்ள சுகாதார மையத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் போது இது நிகழ்ந்துள்ளது.

இந்தப் பெண் மஜல்காவனில் அடகுக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர். 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என்ற நோக்கில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது. குடும்ப அழுத்தம் காரணமாக அடுத்தடுத்த பிள்ளைகளை பெற்றுள்ளார். 

கடந்த சனியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பெற்ற எகண்டே என்ற அந்தப்பெண், பிரசவத்தின் போது அதிக இரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

நாங்களை இதை ‘எதிர்பாரா மரணமாக' இதை பதிவு செய்து குடும்ப உறுப்பினர்களிடம் உடலை ஒப்படைத்தோம் என்று அவர் கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.