Read in English
This Article is From Nov 22, 2019

கணவரைக் கொன்று சடலத்தை வீட்டிற்குள்ளே புதைத்த பெண் கைது

தனது கணவரை கொலை செய்து செய்து கரோண்டலா டோலா கிராமத்தில் அவர்களது வீட்டின் வளாகத்தில் அடக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

சடலம் வீட்டிற்கு புதைக்கப்படிருந்ததை காவல்துறை கண்டுபிடித்தனர் (Representational)

Anuppur :

மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவரை கொலை செய்து செய்து கரோண்டலா டோலா கிராமத்தில் அவர்களது வீட்டின் வளாகத்தில் அடக்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

வழக்கறிஞரான மகேஷ் பனாவர் காணமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மகேஷின் சகோதரர்  அண்ணனின் மனைவியான பிரதிமா பனாவால்தான் காரணம் என்று குற்றம் சாட்டியதை அடுத்து இந்த சம்பவம் வெளிவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண் சந்தேகத்தை  தவிர்க்க அவரே முன்வந்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். தற்போது உண்மை கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

அக்டோபர் 22ம் தேதி மகேஷ் பனாவால் என்ற வழக்கறிஞரைக் காணவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது சகோதரர் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். காணாமல் போனவர் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.

மகேஷின் சகோதரர் தனது மைத்துனர்  அண்ணனைக் கொன்று வீட்டின் கேலரியில் அடக்கம் செய்தார் என்று காவல் நிலையத்தில் தெரிவித்தார். 

Advertisement

இந்தக் கொலை எப்படி நடந்தது என்பது குறித்து பெண்ணின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தபடுமென தெரிவித்துள்ளனர். 

Advertisement